Home

Showing posts with label கெய்த்தகாந்தி நினைவு நிதி. Show all posts
Showing posts with label கெய்த்தகாந்தி நினைவு நிதி. Show all posts

Sunday, 15 November 2020

க.அருணாசலம் : அமரத்துவமும் மதுரமும்

 


கதராடைகள் மீதான ஈடுபாட்டை வளர்த்தல், தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்துதல், நிதி திரட்டுதல் ஆகிய நோக்கங்களுடன் இருபதுகளின் இறுதியில் காந்தியடிகள் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். அன்று மாலை பொதுமக்களிடையே அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அவருக்கு அருகிலிருந்த மேசைமீது கட்டுகட்டாக கதர்த்துணிகள் இருந்தன. கதர் நிதிக்காக கொடுக்கப்பட்ட துணிக்கட்டுகள் அவை. நிகழ்ச்சியின் இறுதியில் ஏலத்துக்கு விடப்பட்டு கிடைக்கும் பணத்தை நிதிக்கணக்கில் சேர்த்துக்கொள்வதற்காக அவை வைக்கப்பட்டிருந்தன.