Home

Thursday, 27 December 2018

காகம் - கட்டுரை



கனகனேரியின் கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது. நான்கு சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.

ஆதரவு - கட்டுரை




பார்வையாளர் நேரம் தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்ததால் கண்போன போக்கில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு கட்டடமாக வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கி பிணக்கிடங்கு வரைக்கும் சென்றுவிட்டேன். அதுவரைக்கும் பார்க்காத இடமென்பதால் எல்லாமே புதுமையாக இருந்தன. மதிலையொட்டிய முட்புதருக்குப் பின்னால் தாழம்பூவின் மணம் கமழ்ந்தது. ஆறேழு வேப்பமரங்களும் ஒரு ஆலமரமும் இரண்டு வாதுமை மரங்களும் அந்த இடத்துக்கு ஒரு கிராமத்துச் சூழலைக் கொடுத்தன.  அவற்றின் நிழலில் இரண்டு அமரர் ஊர்திகளும் ஏழெட்டு இருசக்கர வாகனங்களும் நின்றிருந்தன.

Sunday, 16 December 2018

கதவு திறந்தே இருக்கிறது – பொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள்



சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். அது  கேரளச்சூழலில் உடனடியாக பரவலான கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த நாவல் மலையாளத்திலிருந்து  தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர் கே.வி.ஜெயஸ்ரீ. நாவலின் பெயர்நிலம் பூத்து மலர்ந்த நாள்

பச்சைக்கிளிகள் - சிறுகதை




ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில் தோன்றியது. குழலோசை கேட்டதும் கூட்டம்கூட்டமாக எலிகள் குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன. அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்து விடுகிறான் குழலூதுபவன். அவன் எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன் மறுநாள் அந்த நகரத்தின் குழந்தைகளையெல்லாம் குழலோசையால் கூட்டம்கூட்டமாக அழைத்துக்கொண்டு செல்கிறான்.   உடனே அரசன் உரிய பரிசுத்தொகையைக் கொடுத்து குழந்தைகளை மீட்டுக்கொள்கிறான். ராமசாமி சாரின் கதைகூறும் திறமையால் எங்கள் கண்முன்னால் அந்தக் காட்சிகள் அப்படியே படம்படமாக விரிந்தன. வகுப்பு முடியப்போகிற சமயத்தில்தான் அந்தக் கதை எங்கள் ஆங்கிலப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.