Home

Showing posts with label பச்சைக்கிளிகள். Show all posts
Showing posts with label பச்சைக்கிளிகள். Show all posts

Sunday, 10 April 2022

காணிக்கை - சிறுகதை

  

அடுப்பாக நெருக்கிவைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக்கட்டியை வைத்த சாரதா ஐயனார் கோயில் இருந்த திசையின்பக்கமாக முகம்திருப்பி கண்மூடி ஒருகணம் வணங்கினாள். பிறகு திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன்மீது வைத்தாள்.

Sunday, 16 December 2018

பச்சைக்கிளிகள் - சிறுகதை




ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில் தோன்றியது. குழலோசை கேட்டதும் கூட்டம்கூட்டமாக எலிகள் குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன. அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள் இறக்கி இறக்கும்படி செய்து விடுகிறான் குழலூதுபவன். அவன் எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன் மறுநாள் அந்த நகரத்தின் குழந்தைகளையெல்லாம் குழலோசையால் கூட்டம்கூட்டமாக அழைத்துக்கொண்டு செல்கிறான்.   உடனே அரசன் உரிய பரிசுத்தொகையைக் கொடுத்து குழந்தைகளை மீட்டுக்கொள்கிறான். ராமசாமி சாரின் கதைகூறும் திறமையால் எங்கள் கண்முன்னால் அந்தக் காட்சிகள் அப்படியே படம்படமாக விரிந்தன. வகுப்பு முடியப்போகிற சமயத்தில்தான் அந்தக் கதை எங்கள் ஆங்கிலப்புத்தகத்தில் உள்ள ஒரு பாடம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Sunday, 7 October 2018

மரணம் - சிறுகதை



காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு பயனும் இல்லை. எந்தப் பக்கமும் நகர மறுத்த அம்புக்குறி உயிர்பிரிந்த உடல்போல திரையில்  கிடந்தது.