Home

Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Sunday, 4 June 2023

கனிந்து நழுவும் சூரியன் - கட்டுரை

 

     நேருக்குநேர் பார்க்கும்போது அளவற்ற ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் வழங்குகிற சூரியஅஸ்தமனக் காட்சி ஒருசில கணங்களில் சொற்களால் வடிக்கவியலாத தவிப்பையும் வலியையும் வழங்குகிற ஒன்றாகவும் மாறிவிடும் புதிரை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. புரிந்துகொள்ள முயற்சிசெய்யும் ஒவ்வொரு தருணத்திலும் சிக்கலான ஒரு கணக்கின் விடைக்குரிய இறுதி வரிகளை எழுதத் தெரியாத சிறுவனுக்குரிய தத்தளிப்பையும் வருத்தத்தையுமே இயற்கை வழங்குகிறது.

சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை

 

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”

இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்து கிடக்கும் பழைய பூக்களின் குவியல்மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன்.   ஆனால் மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது.

Sunday, 19 June 2022

கலைக்கு ஓர் அர்த்தம்

 

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால் வேலைக்கும் அப்பால் கலையிலக்கிய வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறத்தில் அவர் ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத்துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

Wednesday, 8 June 2022

அன்னபூரணி மெஸ் - சிறுகதை

  

”வணக்கம். வாங்கவாங்க. நான்தான் ராஜாராமன். இதான் கடைசி பந்தி சார். இதோ இப்ப முடிஞ்சிடும். அதுக்கப்பறமா ரூம பார்க்கலாம். ஒரு பத்து நிமிஷம் அப்படி ஃபேன் கீழ காத்தாட உக்காருங்க.  நல்ல வெயில்ல வந்துருக்கிங்க. வேர்த்துவேர்த்து ஊத்துதே” என்று சொன்னவரின் முகத்தைப் பார்த்ததுமே தனக்கு இந்த இடம் உறுதியாகப் பொருந்திவரும் என்ற நம்பிக்கை பாலகுருவின் மனத்தில் பிறந்தது. ஆனால் எப்படி அந்த எண்ணம் வந்தது என்று தெரியவில்லை. அவனுடைய குரல் அல்லது உடல்மொழி என ஏதோ ஒன்று அதை விதைத்துவிட்டது.

Sunday, 10 April 2022

காணிக்கை - சிறுகதை

  

அடுப்பாக நெருக்கிவைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக்கட்டியை வைத்த சாரதா ஐயனார் கோயில் இருந்த திசையின்பக்கமாக முகம்திருப்பி கண்மூடி ஒருகணம் வணங்கினாள். பிறகு திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன்மீது வைத்தாள்.