மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே ஓவியமாகத் தீட்டிவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல ஓவியர்கள் தமக்குப் பிடித்த காடுகள், மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், கோட்டைகள், அரண்மனைகள், கடைத்தெருக்கள் என பல இடங்களில் சுற்றியலைந்து தமக்குப் பிடித்த காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார்கள். பிற்காலத்தில் அவை பல தொகைநூல்களாக வெளிவந்தன.