Home

Sunday, 26 January 2025

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 1

 

இலக்கியத்தின் ஆர்வமுள்ள மலேசிய இளைஞர்கள் அதன் கலைநுட்பத்தை கூர்மையாக அறிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் இலக்கியத்திருவிழாக்களையும் எழுத்தாளர் நவீன் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த ஆண்டுக்குரிய வல்லினம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து நானும் நண்பர் ஜா.ராஜகோபாலும் விமானம் வழியாக கோலாலம்பூர் வந்து சேர்ந்தோம். என்னோடு என் மனைவி அமுதாவும் வந்திருந்தார். இந்திய நேரத்துக்கும் மலேசிய நேரத்துக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம். இந்திய நேரப்படி 28.11.2024 அன்று  நண்பகல் 11.45க்குப் புறப்பட்ட விமானம் மலேசிய நேரப்படி மாலை 6.45க்கு கோலாம்பூருக்கு வந்து சேர்ந்தது. முறைப்படியான சோதனைகள் முடிந்து நாங்கள் வெளியே வரும்போது ஏழரை ஆகிவிட்டது. அப்போதே வானில் இருள் சூழந்துவிட்டது. 

மலேசியப்பயணம் : அழகான நிலமும் அன்பான மனிதர்களும் - 2

 தொடர்ச்சி.....

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர்கள் மலேசியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர்கள் வந்த வழியிலேயே வந்த டச்சுக்காரர்கள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் காட்டுப்பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்தார்கள். ஆயிரக்கணக்கான மிதிவண்டிகள் வழியாக காட்டை ஊடுருவிப் பயணம் செய்து டச்சுக்காரர்களுடன் மோதினர்.  அதிக அளவிலான உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காக  டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். இந்தோனோசியாவையும் அதற்கு அடுத்த பகுதிகளையும் டச்சுக்காரர்கள் வைத்துக்கொள்ள, ஆங்கிலேயர்கள் மலேசியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.

Monday, 20 January 2025

இலக்கியம் என்பது சுயமரியாதை


கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் புகுமுக வகுப்புத் தேர்வை எழுதிய மாணவரொருவர் முடிவுக்காகக் காத்திருந்தார். அந்த வட்டாரத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்ற முதல் மாணவர் அவர். அவருடைய அம்மா, அப்பா, உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அனைவருமே அவருடைய தேர்வு முடிவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்த மாணவர் மட்டும் தன் முடிவைப்பற்றிய பதற்றமோ, கவலையோ இல்லாமல், தொடர்ச்சியாகக் கிடைத்த விடுப்பை மனத்துக்குப் பிடித்த விதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகமே உலகமென வாசிப்பின்பத்தில் மூழ்கியிருந்தார்.

மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியாக வாழ்வதும்

 

ஒருசில நாட்களுக்கு முன்னால்தான் செந்தில் பாலா என்னும் கவிஞர் தொகுத்து வெளியிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுதியைப் படித்து மகிழ்ந்தேன். பல கவிதைகளின் வரிகள் இன்னும் என் நினைவலைகளில் மிதந்தபடி இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாகப் பெருக்கும் வகையில் இப்போது கும்பகோணம் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கதைத்தொகுதியைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் இளம் வாசகர்வட்டத்தின் செயல்பாடுகள் மாணவர்கள் தம் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள பலவகைகளில் உதவியிருப்பதற்கு இதுபோன்ற தொகுதியே நல்ல எடுத்துக்காட்டு.

Friday, 10 January 2025

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

  

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று  மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டு இரண்டாவது சுற்றில் சந்தியா பதிப்பகத்துக்கு வந்து சேர்ந்தேன். அப்போது உமா மோகனையும் வண்ணதாசனையும் அங்கு நின்றிருந்தனர். வண்ணதாசன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். உமா மோகன் புன்னகைத்தபடியே “என்ன சார் நீங்க? எங்க ஊருக்காரர எனக்கு அறிமுகப்படுத்திறீங்களா? அவரைப் பார்த்ததில்லையே தவிர, நிறைய படிச்சிருக்கேன்” என்று கூறினார். “அப்படியா, சரி சரி” என்று சிரித்துக்கொண்டார் வண்ணதாசன்.

முத்தைத் தேடி

 

கராச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் காந்தியடிகள் முதன்முதலாக உரையாற்ற நேர்ந்தபோது இந்தியச் சமூகம் பெண்களை நடத்தும் விதத்தைப்பற்றிய தன் ஆற்றாமையை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். நம் குடும்பங்களிலும் இதயத்திலும் ஓர் அரசியாக வைத்து மதிக்கவேண்டிய பெண்களை நாம் நிலம், வீடு, தங்க ஆபரணங்களைப்போன்ற பாதுகாக்கப்படவேண்டிய சொத்துகளைப்போல நினைத்துக்கொண்டிருக்கிறோம்.  நம் பிரச்சினைகள் அனைத்தும் அந்தக் கருத்துருவிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

Sunday, 5 January 2025

இருட்டை விலக்கிய வெளிச்சம்

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இந்திய விடுதலைப்போரில் ஒரு முக்கியமான திருப்புமுனை.  விடுதலைக்காக ஆங்காங்கே உருவாகி வந்த எழுச்சிகளிடையே ஒரு குவிமையம் உருவாவதற்கு அது ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திரபால், கோகலே போன்ற மூத்த விடுதலை வீரர்கள் வரிசை அப்போதுதான் உருவானது. இந்த ஆளுமைகளை முன்மாதிரியாகக் கொண்டு தம் வாழ்க்கையை வாழ நினைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் உருவானார்கள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மெட்ரிகுலேஷன் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்த கிருஷ்ண சுவாமி சர்மா என்னும் இளைஞரும் அவர்களில் ஒருவர்.

இரு தன்வரலாறுகள்

  

ஏறத்தாழ நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் நகரத்துக்குள் நான்கு வீடுகளும் புறநகரில் தோட்டத்துடன் கூடிய மாளிகை போன்றதொரு வீடும் வைத்திருந்த செல்வச்செழிப்பான உயர்வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞரின் குடும்பமொன்றில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் பத்து வயதாக இருந்தபோது, இரண்டாவது பிரசவத்தில் அவளுடைய அன்னை மறைந்துவிட்டாள். அந்தத் துக்கத்தின் நிழல் அவள் மீது விழுந்துவிடாதபடி, அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்தார் அவளுடைய தந்தையார். நகரத்திலேயே பெரிய பள்ளியாக இருந்த பெத்யூன் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார்.