நம் தமிழ்சூழலில் இதுவரை தோன்றிய மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைகளில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம், பாரதியாரின் கனவையொட்டி பிறமொழிகளில் முதன்மையாகக் கருதப்படுகிற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்ச்சூழலில் சிறந்தவையாக விளங்கும் படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு பணி, நம் மொழிச்சூழலுக்கு உரமாக விளங்குகிறது. இன்னொரு பணி நம் மொழியின் பெருமையை வெளியுலகத்துக்கு உணர்த்துகிறது. இத்தகு இருவித பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆளுமைகள் பாராட்டுக்குரியவர்கள். என்றென்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.