Home

Sunday, 23 March 2025

கல்யாண்ராமனுக்கு வாழ்த்துகள்

 

நம் தமிழ்சூழலில்  இதுவரை தோன்றிய மொழிபெயர்ப்பாளர்கள் இருவகைகளில் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஒருபுறம், பாரதியாரின் கனவையொட்டி பிறமொழிகளில் முதன்மையாகக் கருதப்படுகிற படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழ்ச்சூழலில் சிறந்தவையாக விளங்கும் படைப்புகளை பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு பணி, நம் மொழிச்சூழலுக்கு உரமாக விளங்குகிறது. இன்னொரு பணி நம் மொழியின் பெருமையை வெளியுலகத்துக்கு உணர்த்துகிறது. இத்தகு இருவித பணிகளிலும் ஈடுபட்டுவரும் ஆளுமைகள் பாராட்டுக்குரியவர்கள். என்றென்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.

கன்னத்தில் அடித்த வாழ்க்கை

  

ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில் உட்கார்ந்துகொண்டு கோலிக்குண்டுகளை  வளைத்துவளைத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தான். அடுக்கும் வேலை முடிந்ததும் “அப்பா, இங்க பாருங்க, பாம்பு” அச்சுறுத்தும் குரலில் சொன்னான். 

Sunday, 16 March 2025

வளவனூர் : நினைவுப்புத்தகத்தில் நிறைந்திருக்கும் சித்திரங்கள்

  

நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.

புதிர்த்தருணங்களின் காட்சி

 

சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்டும். நற்றிணையில் பாலைத்திணைப் பாடலொன்று ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை’ என்னும் புதிரோடுதான் தொடங்குகிறது. தலைவியின் குரலில் அமைந்த அப்பாடல் இளமை அழிந்த முதுவயதில் இளமையை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்பதும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்திருப்போம் என ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது என்பதும் ஏன் இந்தத் தலைவனுக்குத் தெரியவில்லை, இன்பம் துய்க்கவேண்டிய தருணத்தில் இவன் ஏன் பிரிந்துசெல்கிறான். இது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறதே என புலம்பும் தலைவியின் மனக்குறையைத்தான் அப்பாடல் எதிரொலிக்கிறது. புரிந்துகொள்ள முடியாத புதிர்த்தருணங்கள் ஆதிகாலத்திலிருந்தே படைப்புக்களமாக விளங்கி வந்திருக்கின்றன.

Sunday, 9 March 2025

திசை தேடும் பறவை

 

தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

சரண்

 

அந்த இடத்தைக் கோயில் என்று சொல்லமுடியாது. அது இருந்த கோலம் அப்படி. மணிகண்டசாமி இருந்தவரைக்கும் சுத்தபத்தமாகத்தான் இருந்தது. ஐயப்பனுக்கு பக்தர்களும் பெருகிக்கொண்டு வந்தார்கள்.   இருதய நோயிலிருந்து பிழைத்து எழுந்ததற்காக ஐயப்பனுக்கு நன்றி செலுத்துகிறவண்ணம் நாற்பதுக்கு நாற்பது அடி தேறுகிற இடம் ஒன்றை வாங்கித் தானமாகக் கொடுத்திருந்தார் நமசிவாயம் செட்டியார். அதற்கு நடுவில்தான் பதினெட்டு படிகளும் ஐயப்பன் சிலையும்

Sunday, 2 March 2025

கையெழுத்து

 

அத்தையை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள் அம்மா. “நாளைக்கு பரீட்ச இருக்குது. கணக்கு போட்டு பாக்கற நேரத்துல வேல வச்சா எப்படிம்மா? மார்க் கொறஞ்சா திட்டறதுக்கு மட்டும் தெரியுதே, இது தெரிய வேணாமா?” என்ற என் சிணுங்கல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. “அவசரத்துக்கு ஒரு வேல சொன்னா ஆயிரம் தரம் மொணங்கு. பெரிசா மார்க் வாங்கி கிழிச்சிட்ட போ. சீக்கிரமா கூட்டிட்டு வாடா போஎன்று அதட்டி விரட்டினாள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். “போனமா, வந்தமான்று சீக்கிரமா வந்து சேரு. அந்த ஊரு காலேஜ் வண்டி வந்துது. இந்த ஊரு காலேஜ் வண்டி வந்ததுன்னு பெராக்கு பாத்துக்கினு நின்னுடாதஎன்று பேசிக்கொண்டே இருந்தாள் அம்மா.

வழி


வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது