Home

Sunday, 15 June 2025

கிடைக்க மறுக்கிற நீதி - ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்

  

ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ நாட்டில் ஏதோ ஒரு மூலையில் பெண்குழந்தை காரணத்தால் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுவதும் மணவிலக்கு வழங்கப்படுவதும் மறைமுக வழிகளால் தந்திரமாகக் கொல்லப்படுவதும் நடந்தபடியிருப்பதை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்.

வெள்ளை யானை - கைவிடப்பட்டவர்களின் கதை

 

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள்.

Sunday, 8 June 2025

கூண்டு - சிறுகதை

 

அழுவுணி ஆட்டம் ஆடியது அவர்கள்தான்என்றேன்  நான்.

நான்தான் என்றார்கள் அவர்கள்.  ஏற்கனவே நாய்த்தோல் பந்தால்

முதுகு சிவக்க அடிவாங்கிய வேதனை எனக்கு. பட்டாளமாய்

எல்லாரும் சேர்ந்துகொண்டு குற்றம் சாட்டியபோது அவமானத்தில்

அழுதுவிடுவேன் போலிருந்தது. ஒரு கணத்தில் கேலிச்சொற்களின்

கனம் தாங்காமல் பதிலளிக்க இயலாமல் நின்றதும் மிகுந்த

எக்காளத்துடன் அத்தனை பேரும் சிரித்தபடி என்னையே சுற்றி

வந்துதோத்தாங்குளிபாட்டுப் பாடிவிட்டு ஓடினார்கள்.  

சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்

  

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் விட்டல்ராவும் சேர்ந்து செல்வதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். அதற்கு இசைவாக பயணச்சீட்டுகள் கூட பதிந்துவைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு வாரம் முன்னாலேயே சென்னைக்குச் செல்லும் வேலை வந்துவிட்டது. முதலில் பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தனியாக பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டு போய் வந்தேன். விட்டல்ராவ் மட்டும் தொடக்கத்தில் திட்டமிட்ட வகையிலேயே கண்காட்சிக்குச் சென்று ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு திரும்பினார்.

Sunday, 1 June 2025

சுய சரிதை புத்தகங்களுக்கு வசீகரம் - தினமணி கதிர் நேர்காணல்


கேள்விகள்: அருள்செல்வன்

‘காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது’ என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன். 

என்றென்றும் வாழும் இலட்சியவாதம்

  

சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.