Home

Showing posts with label குமாரபுரம். Show all posts
Showing posts with label குமாரபுரம். Show all posts

Thursday, 25 August 2022

கு. அழகிரிசாமியின் படைப்புலகம் - வாழ்க்கையென்னும் பாடம் - பகுதி 1


விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில்

எங்கள் ஊரான வளவனூர் ரயில்வே ஸ்டேஷன்

இருக்கிறது. இரண்டு நகரங்களுக்குமிடையே ரயில்

போக்குவரத்து செழிப்பான நிலையில் இருந்தபோது

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஒரு பெருமை

இருந்தது. மக்கள் ஆதரவு குறைந்து போக்குவரத்தில்

மந்தநிலை உருவானபோது எங்கள் ஸ்டேஷன்

கைவிடப்பட்ட கட்டடமாக உருக்குலைந்தது. ஏதோ

பழங்காலத்து நினைவுச்சின்னம்போலப் பல ஆண்டுகள்

அப்படியே நின்று சிதையத் தொடங்கியது.

குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சி நின்றிருந்தன.