Home

Sunday, 27 October 2024

என்றென்றும் நிலைத்திருக்கட்டும்

  

விடுப்பு நாட்களில் புதுச்சேரிக்குச் செல்லும் நேரங்களில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான இளம்பாரதியைச் சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தது ஒரு காரணம். அவர் தன் நினைவிலிருந்து பகிர்ந்துகொள்ளும் பழையகாலத்து அனுபவங்கள் கேட்பதற்குச் சுவாரசியமானவை என்பது இன்னொரு காரணம். அவருடைய அறையில் கண்ணாடிச்சட்டமிட்ட நிலைப்பேழைத் தட்டுகளில் அடுக்கியிருக்கும் பழைய, புதிய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆசை மற்றொரு காரணம்.

ரோஜா

 

மாற்று பாவாடை தாவணியை தோள்மீது போட்டுக்கொண்டு குளிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீற்றுப்படலை நோக்கிச் செல்லும்போது “தேவிகா, ஒரு நிமிஷம், இங்க வந்துட்டு போம்மா” என்று அடுப்பங்கரையிலிருந்து அம்மா அழைத்தாள்.

Sunday, 20 October 2024

விட்டல்ராவுக்கு விளக்கு விருது

 அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக  கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது.

இதுவோ உலகத்தியற்கை?

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து விஜயா ஹரன் என்பவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கருதுபவர் என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பைரப்பாவின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய ஆக்கங்களைப்பற்றிய கட்டுரைகளை பிறரிடமிருந்து எழுதி வாங்கித் தொகுத்து இரு பெருந்தொகுதிகளாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்குரிய கட்டுரைகளைத் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆற்றாமையும் பொறாமையும்

 

என் நண்பர் பழமொழிகளின் நேசர். பழமொழிகளையெல்லாம் தேடித்தேடி படிப்பவர். நெருக்கமாகப் பழகுகிறவர்களிடம், அவர்களுக்குத் தெரிந்த பழமொழிகளைச் சொல்லும்படி கேட்டுக்கொள்வார். அவர்கள் சொல்வதை உடனடியாகத் தன் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்வார். எபோதாவது என்னைச் சந்திக்க வரும்போது அதுவரை கேட்டறிந்த பழமொழிகளை முன்வைத்து உரையாடுவார். சிற்சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் பழமொழிகளுக்குக் கூடுதலான விளக்கங்களைத் தேடிச் செல்லும் பயணமாகவும் அமைந்துவிடும்.

Sunday, 13 October 2024

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு

 

உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா. அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில். ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு. அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.

நினைவுச்சின்னங்கள்

 

தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர்கள் என்னும் முதன்மைத்தலைப்பும் இலக்கியம், இதழ்கள், பதிப்பகம் என வழங்கப்பட்டிருந்த துணைத்தலைப்பும்தான் இப்புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தூண்டின. பொருளடக்கத்தில் முப்பத்தொன்று தமிழ்ச்சான்றோர்களின் பட்டியல் காணப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், புதுமைப்பித்தன், கல்கி போன்றோர் அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்பட்டியலின் இடையிடையே காணப்பட்ட ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், பேராசிரியர் பி.என்.சீனிவாசாச்சாரியார், இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, மோசூர் கந்தசாமி முதலியார், அரிராம் சேட், அப்பா நா.அருணாசலம், மேகலிங்கம் சுப்பிரமணியன் போன்ற பெயர்கள் அனைத்தும் இதுவரை அறியாத பெயர்களாக இருந்தன. அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே ஒரே மூச்சில் இப்புத்தகத்தைப் படித்துமுடித்தேன்.

Sunday, 6 October 2024

பா என்னும் மூதன்னை


நீண்டகாலம் தொடர்ச்சியாக நிலவிய பஞ்சத்தின் காரணமாகவும் பிளேக் தொற்றுநோயின் காரணமாகவும் 1918ஆம் ஆண்டில்  குஜராத்தைச் சேர்ந்த கேடா மாவட்ட விவசாயிகள் வரி கொடுக்க இயலாமல் தவித்தனர். அரசாங்கத்தின் கருணையை வேண்டி எழுதிய அவர்களுடைய கோரிக்கைக் கடிதங்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் நிலங்களையும் வீடுகளையும் பறிமுதல் செய்யத் தொடங்கினர்.அதன் விளைவாக படேல் பிற வழக்கறிஞர்களை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சத்தியாகிரகத்தை அந்த ஊரில் தொடங்கினார்.அத்தருணத்தில் தோரண என்னும் சிற்றூரில் ஒரு ரெவினியு அதிகாரி இருபத்துமூன்று வீடுகளை ஆக்கிரமித்து பறிமுதல் செய்தார்.பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பாத்திரம் பண்டங்களையும் கறவை மாடுகளையும் கூட பறிமுதல் செய்தார்.செய்தி கிடைத்ததும் அந்த இடத்துக்கு ஒரு பெண்மணி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்.அவர்கள் சோர்வுறாதபடி அவர்களிடையே சொற்பொழிவாற்றினார்.

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு


உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது.ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா.அதில் குறிப்பிட்டிருக்கிறார்.அவற்றில்.ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு.அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.