’மரம் நட்டவன்’ என்னும் பிரெஞ்சுச் சிறுகதையொன்று பல ஆண்டுகளுக்கு முன்னால் மஞ்சரி இதழில் வெளிவந்திருந்தது. என் பள்ளிப்பருவத்தில் நூலகத்தில் அதைப் படித்தேன். உலகமே போர்களில் திளைத்திருக்கிறது. புகுந்த ஊர்களையெல்லாம் அழித்து பாலைவனமாக்குகிறது. அதே நேரத்தில் அப்போரிலிருந்து வெளியேறிய ஒருவன் வறண்ட பொட்டல்வெளியை பல ஆண்டுகள் பாடுபட்டு ஒரு காடாக மாற்றுகிறான். மரங்களைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவன் மனத்தில் இல்லை. அந்தக் கதை பிரெஞ்சு
வாசகர்களிடையே
நல்ல வரவேற்பைப் பெற்றது.