Home

Sunday, 29 September 2024

சாதனையின் பாதையில்

 

ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் மனத்தில் பதிந்த மிகப்பெரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். இயற்பியல், அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை வாழ்நாளின் இறுதிக்காலம் வரைக்கும் அவர் மேற்கொண்டிருந்தார். புவி ஈர்ப்பு தொடர்பாகவும் கருந்துளை கதிர்வீச்சு தொடர்பாகவும் அவர் கண்டறிந்து உலகுக்கு உரைத்த உண்மைகள் விண்வெளி ஆய்வுகளில் ஒரு பெரும்பாய்ச்சலை உருவாக்கியது.

கற்பனையின் பாதை

 

தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக யாரோ ஒருவர் எனக்கு எதிரில் உட்கார்ந்து உரையாடுவதுபோல உணர்ந்தேன். இதற்குமுன் ஆனந்தகுமார், மதார், பொன்முகலி போன்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தபோது எழுந்த அதே எண்ணத்தை அதியமானின் கவிதைகளும் அளித்தன.

Sunday, 22 September 2024

கத்தி - 1


தனியாக நடப்பதில் ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது சிவகாமிக்கு. அம்மா வந்தால் எப்போதும் தொந்தரவுதான். வீட்டில் ஆரம்பித்து வேலங்காடு சேர்கிறவரைக்கும் திட்டிக்கொண்டே வருவாள். தினம்தினமும் திட்டு வாங்கி அம்மா கூட விறகு வெட்டப் போவது என்றாலே சலிப்பு தருகிற விஷயமாகிவிட்டது

கத்தி - 2

 

-இரண்டு-

அம்மா வீட்டிலும் இல்லை, நவநீதம் அக்கா வீட்டிலும் இல்லை. தேடிப் பார்த்து மறுபடியும் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்தாள் சிவகாமி.

அழுகை இன்னும் நின்றபாடில்லை. ஒவ்வொரு நிமிஷமும் பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. கத்தியைத் தொலைத்து விட்டு வெறும் கையோடு வந்து நிற்கும் தன்னை அம்மா நிச்சயம் நொறுக்கிவிடுவாள் என்று நினைத்தாள். வெட்டிப் பலி குடுத்துருவன் என்று திட்டும்போது அம்மா உபயோகப்படுத்துகிற வார்த்தை மாதிரி ஏதோ ஒன்று இன்றைக்கு நிகழப்போகிறது என்ற நினைப்பு மேலும்மேலும் பயம் தருவதாய் இருந்தது. கொஞ்ச நேரத்தில் முகம் வெளுத்து விட்டது. அழுகையை நிறுத்தினாலும் வேதனை தாங்கமுடியாததாக இருந்தது.

Sunday, 15 September 2024

பதற்றமும் திகைப்பும்


 இரவும் பகலும் எப்படி மாறிமாறி உருவாகின்றன என்பதை நாளைக்கு உங்களுக்குச் செய்முறையின் வழியாக விளக்கப் போகிறேன் என்று ஒருநாள் வகுப்பை முடிக்கும் முன்பாகச் சொல்லிவிட்டுச் சென்றார் எங்கள் ராமசாமி சார். அப்போதே மின்சாரம் பாய்ந்ததுபோல ஒருவிதமான பரபரப்பு எங்களிடம் தொற்றிவிட்டது. சார் சார், இன்னைக்கே காட்டுங்க சார் என்று கெஞ்சத் தொடங்கிவிட்டான் எனக்குப் பக்கத்தில் இருந்த கோவிந்தசாமி. அதுக்கு பொரு ளெல்லாம் வேணும்டா. எச்.எம்.கிட்ட சொல்லி நாளைக்குத்தான் எடுக்க முடியும். நாளைக்கி கண்டிப்பா பார்க்கலாம் என்று சிரித்தார் அவர்

பறவைகளின் பயணம்

 

எங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது. பெங்களூர் ஐயர் என்பவருக்குச் சொந்தமான தோட்டம். அதன் மதிலை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்தன. கொய்யா மரங்கள், கொடுக்காப்புளி மரங்கள், மாமரங்கள். அவை பழுத்துத் தொங்கும் காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதற்காகக் காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் மதிலைச் சுற்றி வருவோம். சில துடுக்குப் பிள்ளைகள். மதிலோரமாகக் கற்களை அடுக்கி, அதன்மீது கவனமாக ஏறி, மதிலில் கால்பதித்து. பிறகு மரங்களுக்குத் தாவிவிடுவார்கள். ஐயரின் பார்வையில் பட்டுவிட்டால் சரியாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.

சாதனைப் புள்ளியை நோக்கி...


கவிதை, சிறுகதை, நாவல்கள், மொழி பெயர்ப்புப்படைப்புகள் என தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகிற புதிய வாசகர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் படித்து முடித்து, தனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவத்தை மீண்டும் மீண்டும் அசைபோட்டு, மகிழ்கிற ஒரு மாபெரும் படைப்பு வங்க மொழியில் அதீன் பந்தோபாத்யாய எழுதிய நாவலான ‘‘நீலகண்டப் பறவையைத் தேடி’’. சாலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லைப் போன்றது. ஒருவருடைய வாசிப்புப் பயணத்தில் அந்த நாவல் அப்புள்ளியை சிலர்  வெகுவிரைவில்  அடைவதுண்டு. சிலர் சற்றே தாமதமாக வந்து சேர்வதுண்டு. ஆனால் அந்தப் புள்ளியைக் கடக்காத இலக்கிய வாசகர்களே கிடையாது.

Monday, 9 September 2024

சார்புநிலை என்னும் திரை


ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது, சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடநேர்ந்துவிடும்

உண்மையின் ஒளியைநோக்கி


கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு. அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நித்ய சைதன்ய யதி. குரு சீடர் உரையாடல் வழியாக ஒருபோதும் வற்றாத காட்டாறாக சிந்தனை தன் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைகிறது. அடிப்படையில் நாராயண குரு வேதாந்தி. சங்கரரின் அத்வைத நோக்கை விரிவாக்கியவர். அனைத்து தரிசனங்களையும் தன் தனித்துவம் கொண்ட நோக்கின் அடிப்படையில் ஒன்றிணைத்து ஓர் இணைவைக் கொண்டுவந்தது அவருடைய பெரும்சாதனை. நாராயாண குருவின் அத்வைத சமன்வய நோக்கை மேலைத் தத்துவங்களுடன் இணைத்து வளர்த்தெடுத்தவர் அவருடைய மாணவர் நடராஜ குரு. அவருடைய மாணவர்களில் ஒருவரான நித்ய சைதன்ய யதி உயர்பௌதிகம், உளவியல் பின்னணியில் அப்பார்வையை இன்னும் விரிவாக்கிவைத்தார்.