Home

Showing posts with label சரத்சந்திரர். Show all posts
Showing posts with label சரத்சந்திரர். Show all posts

Tuesday, 18 April 2017

அசோகமித்திரன் : என்றென்றும் வாழும் கலைஞன்



ல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்திருந்த நேரம். ஒரு ஞாயிறு அன்று காலை நேரத்தில் எங்கள் வீட்டருகே இருந்த நூலகத்தில் செய்தித்தாள் படிப்பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரத்தில் செய்தித்தாட்களையும் புதிய வார இதழ்களையும் படித்துவிட்டு, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த மேசைகள் மீது பார்வையைப் படரவிட்டேன். அங்கிருந்த நூலகர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ஒரு பத்து நிமிடம் தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு தேநீர் அருந்தச் சென்றார். அந்த நேரத்தில் யாரேனும் வாசகர்கள் வந்துவிட்டால், அவர்களுடைய கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைச் சொல்லி அவர் வரும்வரைக்கும் அப்படியே உரையாடலை இழுக்கவேண்டும். அதுதான் என் வேலை.