Home

Showing posts with label சிவராம காரந்த். Show all posts
Showing posts with label சிவராம காரந்த். Show all posts

Tuesday, 8 October 2019

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி



சிவராம காரந்த்தின் சோமனின் உடுக்கை

முப்பதுகளில் எழுதப்பட்ட ஒரு நாவல் இன்றளவும் புதுப்புது வாசகர்களை ஈர்த்தபடி நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய அதிசயம். தன் உள்ளடக்கத்தாலும் மொழிப் பயன்பாட்டாலும் பல படைப்புகள் காலத்தால் உதிர்ந்து போய்விடுகின்றன. மிகக் குறைவான படைப்புகள் மட்டுமே காலத்தைத் தாண்டி நிற்கும் வலிமை உள்ளவையாக உள்ளன. தமிழில் பாரதியார் மற்றும் புதுமைப்பித்தன் படைப்புகள் அத்தகையவை. மலையாளத்தில் தகழி, பஷீர் படைப்புகளும் அப்படிப்பட்டவை. கன்னடத்தில் சிவராம காரந்த், குவெம்பு, மாஸ்தி போன்றவர்களின் படைப்புகளையும் அவ்வரிசையில் வைக்கலாம். சிவராம காரந்த்தின் பாட்டியின் நினைவுகள்”, “அழிந்த பிறகுஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தமிழ் வாசகர்களுக்கு நேற்றுவரை படிக்கக் கிடைத்தன. மூன்றாவதாக இப்போது சோமனின் உடுக்கைவந்திருக்கிறது.

Tuesday, 18 April 2017

அசோகமித்திரன் : என்றென்றும் வாழும் கலைஞன்



ல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்திருந்த நேரம். ஒரு ஞாயிறு அன்று காலை நேரத்தில் எங்கள் வீட்டருகே இருந்த நூலகத்தில் செய்தித்தாள் படிப்பதற்காகச் சென்றிருந்தேன். ஒரு மணி நேரத்தில் செய்தித்தாட்களையும் புதிய வார இதழ்களையும் படித்துவிட்டு, என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த மேசைகள் மீது பார்வையைப் படரவிட்டேன். அங்கிருந்த நூலகர் எனக்கு மிகவும் பழக்கமானவர். ஒரு பத்து நிமிடம் தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கும்படி சொல்லிவிட்டு தேநீர் அருந்தச் சென்றார். அந்த நேரத்தில் யாரேனும் வாசகர்கள் வந்துவிட்டால், அவர்களுடைய கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களைச் சொல்லி அவர் வரும்வரைக்கும் அப்படியே உரையாடலை இழுக்கவேண்டும். அதுதான் என் வேலை.

Thursday, 11 February 2016

புதைந்த காற்று – மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை

  





தற்செயலாக கர்நாடகத்தின் உள்பகுதியில் அமைந்த ஓர் ஊரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஏராளமானவர்கள் கூட்டமாக கூடி நின்று ஒரு வீதி நாடகத்தைப் பார்ப்பதைக் கவனிக்க நேர்ந்தது. அந்த வீதி நாடகக்குழுவினர் பாடிய பாடல்கள் வழியாகவே நான் முதன்முதலாக கவிஞர் சித்தலிங்கையாவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். அவருடைய பாடல் தொகுதியைப் படித்த பிறகு, இன்னும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிந்தது. தலித்துகள் வாழ்நிலை, தலித்துகள் படும் அவமானம், தலித்துகள் வேதனை, தலித்துகளின் கனவு, தலித்துகள் எழுச்சி ஆகியவை அவருடைய பாடல்களின் மையப்புள்ளிகளாக இருந்தன. நூற்றுக்கணக்கிலான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் அப்பாடல்கள் பாடப்படும்போது உருவாகும் மன எழுச்சியை பலமுறை நான் கண்ணாரப் பார்த்ததுண்டு. மின்சாரம் பாய்ந்ததுபோல அந்த எழுச்சி மானுடரின் நெஞ்சினூடாக பாய்ந்து செல்லும். அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் அப்போது நான் நினைத்தே பார்த்திராத செய்தி. பத்தாண்டுகள் கழித்து எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து, அவரைச் சந்திக்கச் சென்றபோது அப்பாடல்களின் அனுபவங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அன்பானதொரு புன்னகை வழியாகவும் கண்மலர்தல் வழியாகவும் அவர் அதை உள்வாங்கியபடி என் கைகளைப்பற்றிய கணத்தில் அவரை நான் மேலும் நெருக்கமாக உணர்ந்தேன். அன்றைய எங்கள் உரையாடலை உற்சாகத்துடன் தொடங்க அக்கணம் மிகவும் உதவியது. அந்த நேர்காணல் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ’நிறப்பிரிகை’ என்னும் இதழில் பிரசுரமானது.