Home

Showing posts with label தமிழ் நாவல்கள். Show all posts
Showing posts with label தமிழ் நாவல்கள். Show all posts

Saturday, 26 November 2022

வண்ணவண்ண முகங்கள் - விட்டல்ராவின் ‘காலவெளி’


நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் புதைந்திருக்கும் வண்ணமுகங்களையும் ஒரே நேரத்தில் ஒளியையும் நிழலையும் இணைத்த சித்திரம்போலக் காட்சியளிக்கும் மரத்தடி நிழலென ஓவியமாகத் தீட்டிவைத்திருக்கிறது. 1988 ஆம் ஆண்டில் எழுதி 1990 ஆம் ஆண்டில் முதல்பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலம் கடந்த நிலையிலும் இன்றைய சூழலுக்கும் ஏற்றதாகவே உள்ளது நாவல்.

Sunday, 18 September 2022

சாயாவனம் - அழிவும் ஆக்கமும்

  

ஓர் இயந்திரம் மனித வாழ்வுக்குத் துணையானதா அல்லது எதிரானதா என்கிற கேள்விக்கு வரையறுக்கப்பட்ட விடையைக் கூறுவது எளிதல்ல.  வெறும் கைகளால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்த ஆதிமனிதன்வலிமையும் கூர்மையும் பொருந்திய கல்லாலும் கட்டையாலும் வேகமாகவும் அதிகமாகவும் மண்ணை அகழ்ந்தெடுக்கமுடியும் என்பதைக் கண்டறிந்த கணத்தில் அவன் நிச்சயமாக ஆனந்தக் கூத்தாடியிருப்பான்.  முரட்டுத்தனமான அந்த ஆயுதங்களை மெல்ல உருமாற்றிஉருமாற்றி மண்வெட்டியாக வளர்த்தெடுத்தது அவனுடைய மாபெரும் சாதனை.  அதன் தொழில்நுட்பம் மென்மேலும் செழுமைப்படுத்தப்பட்டு மின்சாரத்தால் இயக்கப்படும் மண்நீக்கியாக இன்று மாபெரும் உருவத்துடன் வடிவமைக்கப்பட்டதும் மானுடனின்  மதிநுட்பமே.  தோற்றத்தில் மண்வெட்டி ஒரு சின்ன ஆயுதமாக இருந்தாலும் அது மனிதக்கைகளின் நீட்சியாகவும் விரல்களாகவுமே வேலை செய்கிறது.  அக்கணத்தில் அவனுக்கு அது அருந்துணை.  நூறு மனிதர்களின் கைவிரல்கள் ஒரே சமயத்தில் இணைந்து வேலை செய்வதுபோன்ற வேகத்தைக்கொண்டது இயந்திர மண்நீக்கி.  ஒருவகையில் நூறு மனிதர்களின் உழைப்பை அது தன்னந்தனியாக ஈடு செய்கிறது. தன் உழைப்புக்குப் பதிலியாக வந்து நிற்கிற ஓர் இயந்திர மண்நீக்கியைஉழைப்பையே நம்பியிருப்பவனின் பார்வையில் எதிரியாகக் காட்சியளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று.  

Saturday, 27 October 2018

கதவு திறந்தே இருக்கிறது - இவை குறுஞ்சித்திரங்கள் மட்டுமல்ல



கோவில்பட்டியில் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக இறந்துவிடுகிறார். நடுவயதில் இறந்துவிட்ட அவருக்கு மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு பிள்ளைகள். காந்தியடிகளின் மறைவுதினத்தின் பிறந்ததால், ஏதோ ஒரு விதத்தில் அவரை நினைவூட்டும் வகையில் இருக்கவேண்டும் என நினைத்து பாரததேவி என போலீஸ் அப்பாவால் பெயர்சூட்டப்பட்ட பெண்குழந்தையும் இவர்களில் ஒருவர். பிழைக்க வழியறியாத அக்குழந்தைகளின் தாய் தன் சொந்த ஊரான மீனாட்சிபுரத்துக்கு வந்துவிடுகிறார். அல்லும்பகலும் வயல்காட்டில் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறார். அம்மாவுக்குத் துணையாக பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த நேரம் போக மற்ற நேரங்களில் மாடு மேய்க்கச் செல்கிறார்கள். புல்லறுத்துக்கொண்டு வருகிறார்கள். விறகு சேகரித்து எடுத்துவருகிறார்கள். காட்டுவழி நெடுக நின்றிருக்கும் மரம், செடி, கொடிகளில் பார்க்கும் காய்களையும் பழங்களையும் பறித்துத் தின்கிறார்கள்.

Tuesday, 18 September 2018

வாழ்வின் கோலங்கள் - மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’


ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை