பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும்
தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத்
துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப்
பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருப்பவன் முன்னால் அரைகுறைப் பார்வையோடு, முடிநரைத்து, உடல்சுருங்கி, தோல்வற்றிய ஒரு மூதாட்டி வந்து நிற்கிறாள். தேடி வந்த விவரம் சொன்னதும் இளைஞனின் கையைப் பற்றி மெல்ல அழுத்தி “அவரு புள்ளயா நீ?” என்று தாய்மை சுடர்விடும் கண்கள் பனிக்கக் கேட்கிறாள். அழகு என்பது உடலில் இல்லை, கண்களின் தாய்மையில் இருக்கக்கூடிய ஓர் அம்சம் என நாம் உணர்ந்துகொள்ளும் தருணம் அது. அந்த உணர்வை அவன் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காத்திருக்கவேண்டியிருந்தது.
Showing posts with label ராஜாஜி. Show all posts
Showing posts with label ராஜாஜி. Show all posts
Tuesday, 8 October 2019
Thursday, 28 June 2018
ராஜாஜியின் மற்றொரு முகம் - கட்டுரை
பெங்களூரில் சட்டப்படிப்பை முடித்த ராஜாஜி சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். 1900 -1920 காலகட்டத்தில் மாகாணத்தின் மிகமுக்கியமான வழக்கறிஞர் அவர். வெற்றிகரமான முறையில் தன் தொழிலை நடத்திவந்தவர். சேலம் நகராட்சியில் உறுப்பினராகவும் செயலாற்றியவர். அப்போது ஆங்கில அரசு கொண்டுவந்த ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் உருவாகிப் பெருகிய எதிர்ப்பலை, சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. ராஜாஜியின் வாழ்க்கையிலும் அது திருப்பத்தை உருவாக்கியது. காந்தியடிகள் தொடங்கிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது, தமிழகத்தில் வேதாரண்யம் யாத்திரையை நிகழ்த்தினார் ராஜாஜி.
Subscribe to:
Posts (Atom)