Home

Monday, 7 April 2025

ஏவாளின் இரண்டாவது முடிவு - சிறுகதை

 

பிரதமர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்ததும் ‘‘பெண்கள் நம் கண்கள்’’ ‘‘தாய்  நம் நடமாடும் தெய்வம்’’ ‘‘தாய்மார்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை’’ என்று வழக்கமாக வரும் உபதேச வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாகக் கணிப்பொறித் திரையில் மௌஸைக் கிளிக்கினேன். நான் நினைத்ததற்கு மாறாக அது வேறொரு செய்தி. அஞ்சலின் மூலையில் பிரதமரின் படம். அவர் என்னைப் பார்த்து வணங்கியபடி அந்த வாசகங்களைச் சொல்வதுபோல அந்த அஞ்சல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்செயல்களும் திருப்புமுனைகளும்

 

’இலங்கை ஒலிபரப்புக் கூட்டுறவு ஸ்தாபனம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் பி.எச்.அப்துல் ஹமீத். அக்காலத்தில் அவர் வானொலியில் பேசும்போதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கமாட்டாரா என்று தோன்றாத நாளே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய தெளிவான உச்சரிப்பும் வெண்கலக்குரலும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். சமீபத்தில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் தலைப்பில் அவருடைய தன்வரலாற்று நூல் அ.முத்துலிங்கத்தின் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் கைக்குக் கிடைத்ததும் ஒரே நாளில் படித்துவிட்டேன்.

Tuesday, 1 April 2025

புதிய எல்லையை நோக்கி

  

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது.  ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.

வண்ணக்கிளிஞ்சல்கள் - புதிய தொகுதியின் முன்னுரை

 

புதிதாக வெளிவந்திருக்கும் ‘வண்ணக்கிளிஞ்சல்கள்’ தொகுதியில் முப்பது கட்டுரைகள் உள்ளன. எல்லாமே என் அனுபவம் சார்ந்தவை. சில தருணங்களில் நான் பார்வையாளனாக மட்டும் இருந்திருக்கிறேன். சில தருணங்களில் பிறருடன் நானும் இணைந்திருக்கிறேன்.