ராஜநாகத்தின் தலைவலியும்
இளவரசியின் புன்னகையும்
ராஜநாகத்தின் தலைவலியும்
இளவரசியின் புன்னகையும்
புத்தாண்டு தொடங்கிய சமயத்திலேயே “இன்னும் ஒரு ஏழெட்டு வாரத்துக்கு உங்கள அடிக்கடி பார்க்கமுடியாது. மொபைல்ல பேசிக்கலாம்” என்று சொன்னார் செல்வம். “ஏதாவது வெளியூர்ப்பயணமா?” என்று கேட்டேன். “எந்த வெளியூரும் கிடையாது. எல்லாமே சொந்த ஊரு பயணம்தான். ஆனால் விட்டுவிட்டு ஆறேழு முறை போய் போய் வரணும்” என்று பதில் சொன்னார்.
முக்கியமான
முடிவு
ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான் விரும்பிப் படித்த வள்ளியப்பா கதைகளைப்பற்றியும் வாண்டுமாமா கதைகளைப்பற்றியும் அவற்றைப் படிக்கத் தூண்டிய என் ஆசிரியர்களைப்பற்றியும் என் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.
ஹுச்சையா
ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ”ஹுச்சையா ஹுச்சையா” என்றே அழைத்துவந்தனர்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்ததும் ‘‘பெண்கள் நம் கண்கள்’’ ‘‘தாய் நம் நடமாடும் தெய்வம்’’ ‘‘தாய்மார்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை’’ என்று வழக்கமாக வரும் உபதேச வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாகக் கணிப்பொறித் திரையில் மௌஸைக் கிளிக்கினேன். நான் நினைத்ததற்கு மாறாக அது வேறொரு செய்தி. அஞ்சலின் மூலையில் பிரதமரின் படம். அவர் என்னைப் பார்த்து வணங்கியபடி அந்த வாசகங்களைச் சொல்வதுபோல அந்த அஞ்சல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
’இலங்கை ஒலிபரப்புக் கூட்டுறவு ஸ்தாபனம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே என் நினைவுக்கு வரக்கூடிய முதல் பெயர் பி.எச்.அப்துல் ஹமீத். அக்காலத்தில் அவர் வானொலியில் பேசும்போதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கமாட்டாரா என்று தோன்றாத நாளே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய தெளிவான உச்சரிப்பும் வெண்கலக்குரலும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். சமீபத்தில் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் தலைப்பில் அவருடைய தன்வரலாற்று நூல் அ.முத்துலிங்கத்தின் முன்னுரையோடு வெளிவந்தது. புத்தகம் கைக்குக் கிடைத்ததும் ஒரே நாளில் படித்துவிட்டேன்.
தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற படைப்பாளிகள் உருவாக்கிய கதைவடிவம் இன்னொரு வகையில் புதுமையாக அமைந்திருந்தது. ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன், ஆதவன் போன்றோர் முன்வைத்த வடிவங்கள் மற்றொரு புதிய பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தன.
புதிதாக வெளிவந்திருக்கும் ‘வண்ணக்கிளிஞ்சல்கள்’ தொகுதியில் முப்பது கட்டுரைகள் உள்ளன. எல்லாமே என் அனுபவம் சார்ந்தவை. சில தருணங்களில் நான் பார்வையாளனாக மட்டும் இருந்திருக்கிறேன். சில தருணங்களில் பிறருடன் நானும் இணைந்திருக்கிறேன்.