Home

Friday 30 January 2015

சிதறல்கள்

சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை கையைவிட்டுப் போகும்போது, அவ்வேலையுடன் வெகுகாலம் வாழ்ந்து பழகிவிட்ட எல்லா வகையான தொழிலாளர்களின் வேதனையையும் அடிச்சரடாக இந்த நாவல் கொண்டிருந்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பு சாத்தியமானது. நாவலை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றி.


புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.140