Home

Friday 30 January 2015

வாழ்க்கை: ஒரு விசாரணை

வாழ்க்கை: ஒரு விசாரணைஎன்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியானவேர்கள் தொலைவில் இருக்கின்றனபுத்தகம் வெளிவந்து எனக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஆண்டில்தான் எங்களுக்கு மகன் பிறந்தான். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை வாங்கிப் படித்ததோடு மட்டுமின்றி, அதை வெளியிடுவதற்கான முயற்சியையும் முன்னெடுத்தவர் எழுத்தாளரும் என் நண்பருமான எஸ்.சங்கரநாராயணன். அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலின் மறுபதிப்பைச் சாத்தியமாக்கியவர் என்.சி.பி.எச். பொறுப்பில் உள்ள நண்பர் சரவணன். எல்லோரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

புத்தகம்  கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.160