Home

Thursday, 15 January 2015

என் மின்னஞ்சல் பேட்டி

பாவண்ணன்:  பள்ளிப்பருவத்தில் ஒரு வாசகனாகவே இருந்தேன். என் படிப்பார்வத்தைப் பார்த்துவிட்டு, என் பள்ளி நூலகரும் எங்கள் கிராமத்து நூலகரும் நான் கேட்கும் புத்தகங்களை உடனுக்குடன் எடுத்துக்கொடுத்தார்கள். எங்கள் பள்ளியில் தமிழாசிரியர்களாக இருந்த ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் இருவருமே என்னை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அதிலும் ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு நான் செல்லப்பிள்ளை. பாடமெடுக்காத நேரத்தில் பாரதியார் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் படித்துக்காட்டி பொருள் சொல்வார். சாம்பசிவம் ஐயா ராமாயணத்திலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் பாடல்களைப் படித்து பொருள் சொல்வார். எனக்குள் கவிதையார்வத்தை விதைத்தவர்கள் அவர்கள். நான் எழுதும் சின்னச்சின்ன கவிதைகளை புன்னகையுடன் திருத்திக் கொடுப்பார்கள். அவர்களின் தொடர்ச்சியைப்போல கல்லூரியில் 1976 ஆம் ஆண்டில் நான் சேர்ந்தபோது, ம.இலெ.தங்கப்பா அவர்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்தார். பாடத்திட்டத்துக்கு அப்பால் அவர் சங்கப்பாடல்களை நடத்தினார்.

http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_8.html

http://kjashokkumar.blogspot.in/2015/01/blog-post_9.html