சந்தியா பதிப்பகம் நடராஜனின் மகனுடைய திருமண நிகச்சியில் கலந்துகொள்வதற்காக
பெங்களூரிலிருந்து விட்டல்ராவ், மகாலிங்கம்,
அவர் மனைவி, நான், அமுதா, திருஞானசம்பந்தம் என ஆறு பேர் சென்னைக்குச் சென்றிருந்தோம்.
வழிநெடுக விட்டல்ராவுடன் உரையாடிக்கொண்டே சென்றோம். எந்தப் பேச்சைத் தொடங்கினாலும்
அதையொட்டிப் பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் சில கதைகளும் பழைய நினைவுகளும் இருந்தன. அந்த
உரையாடல்களை மட்டுமே தொகுத்தால் ஒரு தனி புத்தகமாக எழுதிவிடலாம். அவற்றைக் காதாரக்
கேட்டு சுவைத்தபடி சென்றதால், ஏழுமணி நேரப் பயணம் ஏதோ அரைமணி நேரத்துப் பயணத்தைப்போல
அமைந்துவிட்டது. புறப்பட்டதும் தெரியவில்லை,
இறங்கியதும் தெரியவில்லை, சென்னையை அடைந்துவிட்டோம்.